நான்
'நான்' ஐ
உயர்த்துதல் கர்வம்
'தான் ' ஐ
போற்றுதல் அகம்பாவம்
'தன்னை'
சிந்தித்தல் சுயநலம்
'தன்னால்'
மட்டுமே ஆணவம்
'நானெல்லாம் '
பீற்றி தம்பட்டம்
'அவனெல்லாம்'
எறிந்தால் காழ்புணர்ச்சி
'என்னா
'ல்லாம் யோசித்தால் தாழ்வு சிந்தனை
'யார் யாரோ', 'எவன் எவனோ' ,
'அவனெல்லாம்' தீய்ந்தால் பொறாமை'அப்படி ..
இப்படி இருக்குமோ ' கட்டினால் கற்பனை
'அப்படிதான்
..' 'இப்படிதான் ..' என்ற சுய-வரைமுறை
'என்னாகுமோ ..' அஞ்சினால் பயம்'அடடா
..' வியந்தால் ஏமாற்றம்
'அச் அச்சோ
..' கசிந்தால் ஈரம்
'எனக்கு
மட்டும் ஏன் ..' நொந்தால் அறியாமை
'ஏன் எப்படி
..' யோசித்தால் பகுத்தல் அறிவு
'நான் யார்',
'நான் எதற்கு ' அறிதலே ஞானம்
No comments:
Post a Comment