February 28, 2015

Movie BhagavadGita


relax time...  re-watched g.v.iyers bhagavad gita movie
its hard to udnerstand but still learning new things on as repeated audience... in between re-listened to the cho s ramasamy lectures on tamil translation as well for revised content.

asusual all these are in my playlist

Bhagavad Gita in Tamil - 

https://www.youtube.com/watch?v=QrEYV8go7aI&index=1&list=PLCetKA_P-GzAp8YMIQVL-dhO8hHEW3K7W



Movie_BhagavadGita -
https://www.youtube.com/playlist?list=PLCetKA_P-GzD527wuo7qItJRvbT6sHbk9

KarmaVSGod

have compiled the rightmantra series... nicely portrayed...

DHARMAs_KARMAs\  KarmaVSGod.docx


MANAVAZHWIN Mahathuvam - VARIYAR Books

fantastic swamin - variyar is variyar. simple and small book.


so much of content - deep meanings in his words... heard the kanda puranam audio.. and this is special for couples :)


ILLARAM_Couples_Family\  MANAVAZHWIN Mahathuvam - VARIYAR.PDF

Sundara Kandam - MVAnantha


a much awaited sundara kaandam series...

start on friday - about 1 hr everyday... for 8 days...
nicely performed above... it as he said.

swamin tells in our daily used slang and gets to heart by itself.


_SRIVAISHNAVAM\ SundaraKandam_MVAnantha

Kurai Ondrum Illai - Part 1


revised Korai Ondrum Illai Book - part 1

mokkoor swamin - graet man.... cannot stop listening to his upanysams... still collecting all his upanyasams in audio format... already had only few.. still searching the rest of it. till that time, to finish again the 8 part series of this book.

a must to read for all .. even if some parts / chapters are depthy... donot close it.. jsut fast read and continue finish all the  8 books.... it changes life for sure.




Bheeshma Stuthi - MVAnantha


a must to hear and know stotram - bheeshma stuthi...

_SRIVAISHNAVAM\ BheeshmaStuthi_MVAnantha

திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்


TVM sir is very attracting person with his connecting speeches and this is awesome

GENERAL_BASIC_COMMON\ PenpillaiRahasyam_Murali

"திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்" அடியார் ஆசாரியருக்குக் கூறியது. திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமானை தரிசிக்க எம்பெருமான் இராமானுஜர் சென்ற போது தம் எதிரில் வந்த வைணவப் பெண்பிள்ளை (திருமாலடியார்) திருக்கோளூர் விட்டு நீங்கிச் செல்வது கண்டு காரணம் கேட்டார். அதற்கு எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக் கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று வருந்தினார் அந்த மாதரசி. அப்போது அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்’
1. அழைத்து வருகின்றேன் என்றேனோ
அக்ரூரரைப் போலே
2. அகம் ஒழித்து விட்டேனோ
விதுரரைப் போலே
3. தேகத்தை விட்டேனோ
ரிஷி பத்தினியைப் போலே
4. தசமுகனைக் செற்றேனோ
பிராட்டியைப் போலே
5. பிணம் எழுப்பி விட்டேனோ
தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்து இட்டேனோ
கண்டாகர்ணனைப் போலே
7. தாய்க்கோலம் செய்தேனோ
அநுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ
துருவனைப் போலே
9. மூன்றெழுத்து சொன்னேனோ
கந்திரபந்துவைப் போலே
10. முதல் அடியைப் பெற்றேனோ
அகலிகையைப் போலே
11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ
ஆண்டாளைப் போலே
12. எம் பெருமான் என்றேனோ
பட்டர்பிரானைப் போலே
13. ஆராய்ந்து விட்டேனோ
திருமழிசையார் போலே
14. அவன் சிறியன் என்றேனோ
ஆழ்வாரைப் போலே
15. ஏதேனும் என்றேனோ
குலசேகரர் போலே
16. யான் சத்யம் என்றேனோ
கிருஷ்ணனைப் போலே
17. அடையாளம் சொன்னேனோ
கபந்தனைப் போலே
18. அந்தரங்கம் சொன்னேனோ
திரிசடையைப் போலே
19. அவன் தெய்வம் என்றேனோ
மண்டோதரியைப் போலே
20. அஹம் வேத்மி என்றேனோ
விசுவாமித்திரரைப் போலே
21. தேவு மற்று அறிவேனோ
மதுரகவியார் போலே
22. தெய்வத்தைப் பெற்றேனோ
தேவகியாரைப் போலே
23. ஆழிமறை என்றேனோ
வாசுதேவரைப் போலே
24. ஆயனை வளர்த்தேனோ
யசோதையாரைப் போலே
25. அநுயாத்திரை செய்தேனோ
அணிலங்களைப் போலே
26. அவல்பொரியை ஈந்தேனோ
குசேலரைப் போலே
27. ஆயுதங்கள் ஈந்தேனோ
அகத்தியனைப் போலே
28. அந்தரங்கம் புக்கேனோ
சஞ்சயனைப் போலே
29. கர்மத்தால் பெற்றேனோ
சனகரைப் போலே
30. கடித்து அவனைப் பெற்றேனோ
திருமங்கையார் போலே
31. குடைமுதலானது ஆனேனோ
அனந்தாழ்வான் போலே
32. கொண்டு திரிந்தேனோ
திருவடியைப் போலே
33. இளைப்பு விடாய்த் தீர்த்தேனோ
நம்பாடுவான் போலே
34. இடைகழியே கண்டேனோ
முதலாழ்வார்களைப் போலே
35. இருமன்னர் பெற்றேனோ
வால்மீகரைப் போலே
36. இருமாலை ஈந்தேனோ
தொண்டரடிப் பொடியார் போலே
37. அவன் உரைக்கப் பெற்றேனோ
திருக்கச்சியார் போலே
38. அவன் மேனி ஆனேனோ
திருப்பாணரைப் போலே
39. அனுப்பி வையும் என்றேனோ
வசிட்டரைப் போலே
40. அடிவாங்கினேனோ
கொங்குப் பிராட்டியைப் போலே
41. மண் பூவை இட்டேனோ
குருவ நம்பியைப் போலே
42. மூலம் என்று அழைத்தேனோ
கஜராசனைப் போலே
43. பூசக் கொடுத்தேனோ
கூனியைப் போலே
44. பூவைக் கொடுத்தேனோ
மாலாகாரரைப் போலே
45. வைத்த இடத்து இருந்தேனோ
பரதனைப் போலே
46. வழி அடிமை செய்தேனோ
இலக்குமணனைப் போலே
47. அக்கரைக்கே விட்டேனோ
குகப்பெருமானைப் போலே
48. அரக்கனுடன் பொருதேனோ
பெரிய உடையாரைப் போலே
49. இக்கரைக்கே சென்றேனோ
விபீடணரைப் போலே
50. இனியது ஒன்று வைத்தேனோ
சபரியைப் போலே
51. இங்கும் உண்டு என்றேனோ
பிரகலாதனைப் போலே
52. இங்கில்லை என்றேனோ
ததிபாண்டனைப் போலே
53. காட்டுக்குப் போனேனோ
பெருமானைப் போலே
54. கண்டு வந்தேன் என்றேனோ
திருவடியைப் போலே
55. இருகையும் விட்டேனோ
திரௌபதியைப் போலே
56. இங்குப் பால் பொங்கும் என்றேனோ
வடுக நம்பியைப் போலே
57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப்
பிள்ளையைப் போலே
58. நில்என்று பெற்றேனோ
இளையாற்றுக்குடி நம்பியைப் போலே
59. நெடுந்தூரம் போனேனோ
நாதமுனியைப் போலே
60. அவன் போனான் என்றேனோ
மாருதியாண்டான் போலே
61. அவன் வேண்டா என்றேனோ
ஆழ்வானைப் போலே
62. அத்வைதம் வென்றேனோ
எம்பெருமானாரைப் போலே
63. அருள் ஆழம் கண்டேனோ
நல்லானைப் போலே
64. அனந்தபுரம் புக்கேனோ
ஆளவந்தாரைப் போலே
65. ஆரியனைப் பிரிந்தேனோ
தெய்வ வாரியாண்டானைப் போலே
66. அந்தாதி சொன்னேனோ
அமுதனாரைப் போலே
67. அநுகூலம் சொன்னேனோ
மாலியவானைப் போலே
68. கள்வன் இவன் என்றேனோ
லோககுருவைப் போலே
69. கடலோசை என்றேனோ
பெரிய நம்பியாரைப் போலே
70. சுற்றிக் கிடந்தேனோ
திருமாலை யாண்டான் போலே
71. சூளுறவு கொண்டேனோ
திருக்கோட்டியூரார் போலே
72. உயிராய பெற்றேனோ
ஊமையைப் போலே
73. உடம்பை வெறுத்தேனோ
திருநரையூராரைப் போலே
74. என்னைப் போல் என்றேனோ
உபரிசரனைப் போலே
75. யான் சிறியன் என்றேனோ
திருமலை நம்பியைப் போலே
76. நீரில் குதித்தேனோ
கணபுரத்தாளைப் போலே
77. நீருகம் கொண்டேனோ
காசி சிங்கனைப் போலே
78. வாக்கினால் வென்றேனோ
பட்டரைப் போலே
79. வாயில் கை விட்டேனோ
எம்பாரைப் போலே
80. தோள்காட்டி வந்தேனோ
பட்டரைப் போலே
81. துறைவேறு செய்தேனோ
பகவரைப் போலே
wiki



THIRUVASAKA THEN - Sugi Sivam

asusual sugi sivam sir, made the contents simple with his genuine and down to earth speech...

SukiSIVAM \  THIRUVASAKA THEN 1 and 2

Devanga Puranam Charitram

collected various artcile over internet and compiled up notes on the Devangar Puranam_Charitram. have collated as sequence of documents as sequence stories...
nice and good to know own..

PURANAs_ITHIKHASAs\ DevangaPuranam_Charitram

Devi Bhagavatham - Keeran

simply superb upanyasam from pulavar.
very attractive and simple and awesome to hear...

PURANAs_ITHIKHASAs\ DeviBhagavatham_Keeran

mystic - pithur dosham

researcher mystic selvam sir - pithur dosham lecture...
lots of notes taken...

GENERAL_BASIC_COMMON\ MysticSelvam  \ 10 Pithur Dosham


Bharatiya Kalaachaaram

great discourse from swamin


GENERAL_BASIC_COMMON\ BharatiyaKalaachaaram_MVAnantha

Puranithil Pengal Purushargal

wonderful upanyasam by sri anantha padmachariyar swamin ... must to hear by couples ;)

puranathil pathi vrathaigal.

ILLARAM_Couples_Family\ PuranithilPengalPurushargal_MVAnantha

February 23, 2015

February 17, 2015

வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!! உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது.அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி.இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும்,தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?" அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை" வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?" "தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார்.அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார்.படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்" வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள்.அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை.அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான்.இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா" திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும்,துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான். இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம்.இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான்.மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்.ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா? எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும்,தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும்,சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள்.முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள்.நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம்.அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது.அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!