இவை நம் அன்றாட வாழ்வில்
செய்ய முடிகிற, செய்ய வேண்டிய வேள்விகள் அல்லது யக்ஞம் ஆகும். இவற்றையும் ஐந்தாகப் பிரித்து பஞ்ச யக்ஞம் என்றார்கள்.
அவை பிரம்ம
யக்ஞம், பித்ரு யக்ஞம், தேவ
யக்ஞம், பூதா யக்ஞம், மனுஷ்ய
யக்ஞம்.
பிரம்ம யக்ஞம் என்பது
தினமும் வேதத்தைப் பாராயணம் செய்வது. இறைவனுக்கு உணவினை சமர்ப்பித்துவிட்டு
உண்பது. எதற்காக வேதத்தைப் பாராயணம் செய்யவேண்டும் என்றால், இந்த உலகம் நிலையில்லாதது, இந்த உலகத்தில்
நான் வாழும்போது எனக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும்
உள்ளது. அவற்றின் மீது நான் கருணை காட்டவேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதற்காக.
பித்ரு யக்ஞம் என்பது நமது குடும்ப முன்னோர், குலதெய்வம் ஆகியவற்றை வணங்கி,அவர்களுக்கு தர்ப்பணம், சமர்ப்பணம் செய்து வேண்டிக்கொள்வது. என்னால்
அறியாமல் செய்யப்பட்டபாவங்களை மன்னித்து என் குடும்பம் நன்றாக உதவி செய் என வேண்டிக் கொள்வதன் பொருட்டு நாம்இதைச் செய்கிறோம்.
தேவ யக்ஞம் என்பது
தேவர்களுக்கானது. நாம் நன்றாக வாழவும், நம்மைச்
சுற்றியுள்ளவை அனைத்தும் வாழவும் மழை தேவை, சரியான அளவு
வெயில் தேவை, காற்று தேவை.. இப்படி ஒவ்வொரு தேவைக்கும் நாம்
ஒரு கடவுளை ஆராதிக்கிறோம். அந்தக் கடவுள்கள் தினமும் உண்ண வேண்டும், அவ்வாறு அவர்கள் நம்மிடம் சாப்பிட்டால் மன மகிழ்ச்சியடைந்து நமக்கு
நல்லதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. இதன் பொருட்டே தேவ யக்ஞம்
செய்கிறோம். ஓமம் வளர்த்து அதில் வரும் புகையையும், பிரசாதங்களையும்
அவிர்ப்பாகமாகத் தருகிறோம்.
பூத யக்ஞம் என்றால் பூதங்களில்
சேர்க்கையால் உருவாகியிருக்கிற நம்மை விட தாழ்ந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு
தருதல்.
மனுஷ்ய யக்ஞம் என்றால், வீடு தேடி வரும் அந்நியரை உபசரித்து அவருக்கு உணவிடுதல். அந்நியர் ரூபத்தில் இறைவனே வருவார் என்பது நம் மக்களின் அனுபவம்.
இவையெல்லாம் நாம் செய்த பாவங்களைக்
கரைத்துப் புண்ணியத்தை நமக்குச் சேர்ப்பதற்காகவே என்று முன்னோர்கள்
வகுத்திருந்தார்கள்.
இதற்காக அவர்கள் ஊர்த்
திருவிழா, அமாவாசை போன்றவற்றையும் ஏற்படுத்தினார்கள். இதை
யோசித்துப் பார்த்தால் நமக்கே புரியம்.
நாம் நமக்கு விருப்பமான ஒரு தெய்வ
வடிவில் கடவுளை கும்பிடுகிறோம். இந்தக்கடவுள்தான் நம் இஷ்ட தெய்வம். பெரும்பாலும்
நாம் இஷ்ட தெய்வ வழிபாட்டின் மூலமாகவே யக்ஞங்களைச் செய்கிறோம்.
நமது அன்றாட வழிபாட்டை
எடுத்துக்கொள்ளுங்கள். இஷ்ட தெய்வத்தின் முன் நின்று ஸ்லோகம் சொல்லுவோம். எந்த
சுலோகம் சொன்னாலும் ஓம் என்ற பதத்தைச் சேர்த்துச் சொல்வோம். இது ஓங்காரம், வேதத்தின் சாரம். இதுவே கடவுள். இதை நாம் சொல்லித் துதிக்கும் போது
இறைவனை திருப்தி செய்கிறோம். எனவே இது பிரம்ம யக்ஞம்.
இஷ்ட தெய்வத்தின் முன்
வெறும் வாயால் மட்டும் துதிப்போமா? நமக்கு
விருப்பமான கனி வகைகளை அல்லது பிரசாதம் படைப்போம். இதை இறைவன்
ஏற்றுக்கொள்ளவேண்டுவோம். இவ்வாறு இறைவனுக்கு போடப்படும் படையலை நம் இஷ்ட
தெய்வத்திற்குப் போடுவது தேவ யக்ஞம்.
இலை போட்டுப்
படைக்கும்போது தனியிலை போடமாட்டார்கள். மூன்று அல்லது ஐந்து எனப்போடுவார்கள்.
ஐந்து இலை போடுவதே சரியானது. இவ்வாறு போடப்படும் படையலை சாப்பிடுவோம். நம் மூலம்
பித்ருக்கள், குல தெய்வம் சாப்பிடுவதால் இது பித்ரு யக்ஞத்தை
நிறைவேற்றுகிறது.
சாப்பிடும் முன்பாக, காகத்திற்கு உணவிடுவோம். நம்மை விடத் தாழ்ந்த உயிருக்கு தருவதால்
இது பூத யக்ஞம்.
பண்டிகையின் போது நாம் மட்டுமே
சாப்பிடாமல் அந்நிய மனுஷிளையும் அழைத்து உணவு தருவோம். அல்லது வீட்டிற்கு
வருவோருக்கு அன்னம் இடுவோம். இதற்குப் பொருள் தெய்வம் மனுஷ ரூபமாக வருகிறது
என்பதாகும். இது மனுஷ யக்ஞத்தைச் செய்வதாகும்.
இப்படிப்பட்ட விஷயங்களை நாம் தொடர்ந்து
செய்தால் நம் கணக்கிலுள்ள பாவங்கள் அழிந்து புண்ணியம் சேரும்.