April 24, 2015

closure

stopping blogging for now (temp?)...as busy to vacating and other personal closure works...

lots already to watch/learn/study... anyhow, time to do nothing, except molding inner-self and seeking  distance peace.

'summa iru' continues... :)
hope someday will resume blogging my experience...
--

end of islandic life..being at holy land...

--

வாய்மை

As long as we keep hiding our flaws, they would continue to be with us. When we accept that we have made a mistake and when we have the mental strength to speak the truth, our flaws would soon disappear from us.



experience - from/to

when I took the experience of personal, spiritual uplift to the Jobs, I was successful in both. 
but bringing the Job skills to personal, family - it spoiled both! 

 not to take the professional skills to implement at personal, family - I/it won't be that successful, as the maturity demands on the role and job level. 

whereas facing the maturity attained by personal Experience and family and self-spiritual attainment maturity helps in uplift to profession, society and to self.

- is it so?

painful


Growth is painful. 
Change is painful. 
But nothing is as painful as staying stuck Somewhere you don't belong. 

கல்யாணம்

கல்யாணம் என்பது ஒரே பெண்ணிடம் பலமுறை காதல்வயபடுவது என்பதே ஆகும் !!

விதி

நல்லது செய்வதை நாளைக்கென வைத்து இன்றைய பொழுதை இஷ்டத்தில் கழித்து என்றைக்கும் நாம் படும் கஷ்டத்துக்கெல்லாம் நாம் வைத்த பெயர் - விதி !!!

good Apology


good Apology has three parts: 

1. I am Sorry 
2. It's my Fault 
3. What can I do to make t Right 

But most people miss the third part. 
If you want to say sorry, mean it and 
do something to make it right. 

அன்பின் சுவை

விருப்பு, வெறுப்பு மற்றும் சரி,தப்பு கோட்பாடுகளில் சிக்கிக் கொள்பவர்கள் , எப்போதும் அன்பின் சுவையை அறிய முடியாது .

- சத்குரு

அஹிம்ஸை

பொதுவாக, அஹிம்ஸை என்றால் மற்றவர்களை நாம் துயரப்படுத்தாமல் இருத்தல் என்றே நினைத்து வருகிறோம். அஹிம்ஸையை நாம் நம்மிடதிலிருந்தே துவங்க வேண்டும்.


நம்மைத் துயரப்படுத்திக் கொள்ளாமல் இருத்தலும்  அஹிம்ஸையே . 

ஆகவே நம்மையும் புண்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களையும் புண்படுத்தாமல் இருப்பதே அஹிம்ஸை

உறவு

an incomplete verse, which i tried many months back.... but still didnt find to complete it.. any help from :)
please comment ur completion lines. thanks. 

உறவை அறுக்கும் பகைமை வேண்டா
உறவை வேரறுக்கும் துரோகம் செய்யா
உறவாடி கெடுக்கும் மனிதரும் வேண்டா

உறவே வேண்டா என ஒதுங்குதல்  சரியா

உறவு மட்டும் போதும் எனும் சம்பந்தம்
உறவாய் உயிராய் இருத்தல் நட்பு
உறவு உடலோடு மட்டுமோ காமம்
உறவு நெஞ்சத்தில் இருந்தே அன்பு
உறவு என்னுடையதாக்கும்  எனும் சொந்தம்
உறவை  கடமையாய்  செய்ய பந்தம்
 உறவினில் மட்டும் வந்திடுமா சந்தோசம்
உறவு  உண்மையா சந்தேகம்
உறவா என  சோதனை வேண்டா உணர்ச்சி
உறவை கெடுக்கும் மட்ட எண்ணம்
உறவே இல்லை என ஏங்கும் ஏக்கம்
உறவை புதிதாய் தேடுதல் சரியோ
உறவில் புதிதுபுதிதாய் புகுத்தல் சரியா
உறவு
உறவாடி கெடுத்தல் துரோகம்

உறவை சம்பத்த படுத்தா மட்டம்

உறவு பெயரளவில்
உறவினர் ஊரரவில்
உறவினில் கலப்படம் கள்ளம்

உறவு அமைந்திடும் ஒருத்தியுடன் பிறப்பினில்
உறவை உண்டாக்கும் ஒருத்தியுடன் காதலில்
உறவுகள்  உணர்த்திடும் சேர்க்கையில்
உறவே இல்லையோ வேதனையில்


உறவு பெற்றோர்
உறவு மனைவி
உறவு பிள்ளைகள்
உறவு உற்றார்கள்
உறவு நட்பு

உறவு  காதல்

உறவு ...

fail

If the life is for wining and only winner gets place.. I like to fail a lot.
Coz its not the first attempt winners gets to history book, but also for person with failure experiences and know exactly where is the point to care not to lose knows more than winning and winners.
As mentions, if a person wins by first attempt , well and good.. But fails in subsequent.. Then their victory considers to be luck..
Whereas initially fails.. But steadily stands up with crossing the pitfalls is considered the mega and real knowledge win


Am still failing, thereby understanding my lessons… and knowing the winning (it's just the milestone where something is achieved, that’s it) of ego clearance is made.

கடமை

தேவைக்காகவும், நோக்கத்துடனும் வருபவர்கள்
பெற்றதும்/அடைந்தவுடன் சென்றிடுவர்/விலகிடுவர்

தேவையறிந்து, நம்மையும் அறியாமல் , நமக்கும் தெரியாமல்

உதவுவர், - வீண்பழி   பெற்று, கடுஞ்சொல் கேட்டும் தன் கடமை செய்திடுவார் 

மேன்மை

தன்னை  யாரும் எதுவும் சொல்லிட கூடாது ... அப்படியே இருந்தாலும் அது புகழ்ச்சி யாக மட்டுமே இருக்க வேண்டுமென விரும்புவர்....நிச்சயமா கடமையை மறப்பர் ... அதனினும் பொய் பிரச்சாரம் செய்வர்...
>> அப்படியே சொல்லினும் , அதனை ஊடுருவி யார் என்ன அதற்கு சொல்கிறார் என அர்த்தமாயின் மேன்மை பயக்கும்


விமரிசனத்துக்கு அஞ்சும் - உண்மையை துறந்து, சமூக போலித்தனதுக்காக, நெறியற்ற, பொறுப்பற்ற, தான்தோன்றி வாழ்க்கை, - என்ன பயன் ? 

பிறப்பு


பயம் கொள்ளல், பணிய வைத்தல் கூடா ..

நம்மை நாம் அடியார் ஆக்கி சரணடையவே பிறப்பு 

குற்றம்


பிறன் குணம் செயல் நோக்குதல் குற்றம்
தெரிந்தும் தன்னை நோக்காமை

அரிது

 மிரட்டுதல் யார்க்கும் எளியவாம்
அடிபணிதல் அன்பிற்கு அரிது

April 23, 2015

fill me

A beggar came to an emperor and the beggar said, 'If you are going to give me anything there is a condition.'
The emperor said, 'What do you mean? What do you mean by your condition?'
The beggar said, 'This is my condition: I accept only if you can fill my begging bowl absolutely.'
It was a small begging bowl. The King said, 'What do you think I am? Am I a beggar? I cannot fill this dirty small begging bowl?'
The beggar said, 'It is better to tell you before, because later you can get into trouble. If you think you can fill, fill.'
The King called his vizier and told him to fill it with precious stones: with diamonds and rubies, emeralds. Let this beggar know with whom he is talking!

But then there was difficulty. The bowl was filled but the king was surprised -- as the stone fell into it, it would disappear. It was filled many times and each time it was again empty.
Now he was in a great rage, but he told the vizier, 'Even if my whole kingdom goes, if all my treasuries are emptied, let them be -- but I cannot allow this beggar to defeat me. This is too much.'
And all the treasures, it is said, disappeared. By and by the king became a beggar. It took months. And the beggar was there and the king was there and the whole capital was there and everybody was wondering what was going to happen, what would happen in the end. Everything was simply disappearing.


Finally the king had to fall at the feet of the beggar and he said, 'Forgive me, but before you leave just tell me one thing. What is the secret of this begging bowl? All has disappeared in it.'
The beggar started laughing. He said, 'It is made of human ego. I have made this begging bowl of a human ego: everything disappears in it, nothing ever fulfills it.'

It is a tremendously beautiful story. That's what is happening to you. It is not a story, it is your life.
You go on putting in your begging bowl houses, cars, bank balances -- everything disappears.
Again you are empty. Never any satisfaction, never any contentment. Again you are begging.
You have been doing it for many lives. It is your story. It is literally true, it is not just symbolically true.

It is a truth in everybody's life, in man's life.
We remain a beggar. The begging bowl remains empty. It seems it has no bottom to it. You drop anything, it simply disappears.
The ego is never fulfilled.

April 21, 2015

சாபனை விபரங்கள்

சாபனை விபரங்கள் (சுழிமுனை)
ஒருவர் பலவித சூழ்நிலையில் வம்சா வழியாக துன்பப்பட்டுக் கொண்டு இருப்பின் அவர் பிரேதசாபம், தேவதோஷம், ஸர்ப்பதோஷம், பித்ருதோஷம், அபிஷhர தோஷம், திருஷ;டி தோஷம் போன்ற சாபனைகளில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவரும், இதை அவரது ஜனன ஜாதக கிரஹ நிலை கொண்டு கண்டிப்பாக அறியலாம். 

1. பிரேத சாபம் : பிரேத சாபனை என்பது ஒருவரது குடும்பத்தில் இறப்பு நேரும் போது இறப்பு நடந்த இடத்தை சுற்றி சுமார் 88 அடி தீட்டு ஏற்படுகின்றது. இதை சிலர் பொருட்படுத்தாமல் உணவு அருந்துதல், பூஜை செய்தல், தாம்பத்ய தொடர்பு கொள்ளுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் உண்டாவதாகும். மேலும் பிணத்தை வைத்துக் கொண்டு முறை செய்வதற்காக சண்டை போட்டுக்கொள்வது, பாகம் பிரிப்பது கடன் கொடுத்தோர் கடனை திருப்பி செலுத்த சொல்லுதல் இதன் மூலமும் இந்த சாபனை தொடரும்.
விளைவு : தீராத நோய்கள் ஏற்படும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், மனதில் நிம்மதியே இருக்காது, எந்த வித காரியத்தையும் சுலபமாக முடிக்க முடியாது, மணவாழ்க்கையில் வெறுப்பு, பிரிவு ஏற்படும் புத்திரசோகம் கொடுக்கும், தேவையற்ற பொருள்நஷ;டம் கொடுக்கும், புத்தி ஒரு சமயம் போல் மறுசமயம் இருக்காது.

2. தேவதோஷம் : தேவதோஷம் என்பது வீட்டில் பரம்பரை பரம்பரையாக பூஜை படங்கள் அல்லது எந்திரங்கள் அல்லது விக்கிரஹங்கள் இவற்றை பூஜித்து விட்டு பிறகு இவைகளை பூஜை செய்யாமல் அலட்சியப்படுத்துவதால் வருவது.
விளைவு : எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்காது, செலவு, உற்றார் உறவினர் மூலம் செலவு, வம்பு, வழக்கு, பிரயாணத்தால் செலவு, மருத்துவத்தால் செலவு, உறவுகள் பகையாக மாறும், பக்கத்து வீட்டுக்காரரால் சதா பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். தாம்பத்தியத்தில் வெறுப்பு ஏற்படும்.

3. ஸர்ப்பதோஷம், நாகதோஷம் (பெண் சாபனை) : ஸர்ப்பதோஷம் என்பது பெண்களுக்கு இழைத்த அநீதியால் வருவது.
கன்னிப்பெண்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை மணப்பது. நண்பனது மனைவியை நிர்பந்தத்தால் பாழ் செய்வது. அதிகாரத்தால் பெண்ணை பணிய வைப்பது. மணமான பெண், விதவைபெண், வாழாமல் வீட்டில் இருக்கும் பெண் இந்த பெண்களிடம் நன்றாக வாழவைப்பேன் என்று உறுதி கூறி சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு நடுவீதியில் விட்டு விட்டு ஓடி விடுவது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை துவம்சம் செய்வது. சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்பி விடும் பெண்ணை மோசம் செய்வது. ஒன்றும் அறியாத சிறுமிகளை கெடுப்பது. முதல் மனைவி மனது நோக இரண்டாவது மனைவியை கொண்டு வருவது.
விளைவு : மனைவி கள்ள தொடர்பு வைத்து பல வித அவமானத்துக்கு உள்ளாக்குவாள். மனைவியிடத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை ஏற்படும் வீட்டில் நுழையவே பிடிக்காது. பெண் குழந்தைகள் தன் இஷ;டத்திற்கு நடந்து அவமானத்துக்கு உள்ளாக்குவார்கள். தாய், சதோதரியிடத்தில் மனவேற்றுமை உண்டாகி கொண்டே இருக்கும். கணவன் மனைவியிடத்து அன்யோன்யம் இருக்காது அதே சமயத்தில் பிளவும்; இருக்காது. மணவாழ்க்கையால் சொந்தத்தில் மதிப்பும், மரியாதையும் குறையும், கணவன் மனைவிக்கு அடிக்கடி உடல் பாதிப்பு இருக்கும். தொழில் விஷயமாக கணவன் மனைவிக்கிடையே அபிப்ராய பேதங்கள் உருவாகும், தொழில் நிமித்தமாக கணவன் மனைவி பிரிவு ஏற்படும். தன் மனைவி, சுகத்துக்கு தானே வேறு ஆள் கொண்டு வரும் நிலை ஏற்படும். அண்ணன் மனைவி, தம்பி மனைவி, மாமியார் மருமகன், மருமகள் மாமனார் தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் மனைவியிடத்தில் அனுதினமும் கோபம் தாபம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

4. பித்ரு தோஷம் : பித்ரு தோஷம் என்பது வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் விடுவது.
நன்றாக வளர்த்து எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்து வாழ வைத்த பெற்றோர்களை வயதான காலத்தில் தவிக்க விடுவது, அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பது, தனக்கென்று உயர்தர உணவும் பெற்றோர்களுக்கு என்று தரம்; குறைந்த உணவும் கொடுத்து ஹிம்சைக்கு உள்ளாக்குவது, பெரியோர்களை அலட்சியப்படுத்தி பணியாட்களாக கருதுவது, தனது பெற்றோர்களை பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவது, இயற்கை பாதிப்பில் இருந்து பெற்றவர்களை காப்பாற்றாமல் விடுவது, இறந்த பெற்றோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, அவர்களது உடமைகளை அலட்சியப்படுத்தி விற்பது, கொடுமை தாங்காமல் பெரியோர்கள் தற்கொலை செய்து கொள்வது இந்த செயல்கள் பித்ருதோஷத்தை கொடுக்கும்.
விளைவு : அடிக்கடி புத்தி மாறாட்டம் ஏற்படும், தன் இனத்தை விட்டு வேறு இனத்தில் பிறர் வெறுக்கும்படி திருமணம் நடக்கும், தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெரியோர்களது ஆதரவு கிடைக்காது, அடிக்கடி பெரியோரிடத்து திட்டு வாங்கிகொண்டே இருக்கும், ஒரு சமயம் நன்றாக பேசும், மறுமுறை பேசாது, தானே பேசும் சிரிக்கும், தலையை நமிர்த்திக் கொண்டே நடக்கும், கர்வம் பிடிக்கும், தேவையில்லாமல் பொருள் நஷ;டம் புத்திரசோகம் ஏற்படும், தலையில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை பகுதி சூடாக இருக்கும், டென்சன் வாழ்க்கை ஏற்படும், மனதை போட்டு குழப்பிக் கொண்டே வாழ வேண்டி வரும்.

5. அபிஷhர தோஷம் : அபிஷhர தோஷம் என்பது செய்வினை தோஷம் ஆகும். மாந்திரிகத்தை பயன்படுத்தி தனக்கு பிடிக்காதவர்களை அழிவுக்கு கொண்டு செல்வது. தேவதைகளை அடிமைப்படுத்தி ஏவல் விடுவது. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வருடகாலம் பாதிக்கப்படுவர், யார் செய்தார்களோ அவர்கள் 98 வருடகால் பாதிக்கப்படுவர், இவர்களது வம்சா வழியும் முன்னேற்றம் அடையாது. ஆக யாரும் செய்வினை தோஷத்தில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம். பலர் கஷ;டப்படும் போது செய்வினை செய்துவிட்டார்களோ என்று அச்சப்படுவர் இது தேவையற்ற அச்சமே, செய்வினை ஏவலை வெகு சுலபமாக செய்துவிட முடியாது, ஊர் தெய்வ உத்திரவு, குல தெய்வ உத்திரவு, ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலைகள் இவற்றை அறிந்து தான் செய்வினை ஏவலில் ஈடுபடமுடியும்.
விளைவு : செய்து வைத்த உணவு நிறம் மாறும், உணவில் மனித உறுப்பு கிடக்கும், உணவில் துர்நாற்றம் கிளம்பும், பசு மாடு இறக்கும், இரவில் கதவு தட்டப்படும், பயங்கரமான உருவம் கனவில் வந்து பயமுறுத்தும், கூரையில் மனிதர் ஓடுவது போல் இருக்கும், கற்கள் வீசப்படும், தீப விளக்கு எரியாது, இனம் புரியாத கொடூர நோய் உருவாகும், சேர்த்து வைத்த செல்வம் பாழாகும், மனநிம்மதி இருக்காது, பிழைக்க வழியின்றி மனம் பேதலிக்கும், தன்னிலை மறப்பார்கள், சிரிப்பார்கள், ஓடுவார்கள்.

6. திருஷ;டி தோஷம்; திருஷ;டி தோஷம்; என்பது தனது ஆசை நிறைவேறாமல் எவர் ஒருவர் இறக்கின்றாரோ அவர் ஆன்மா சாந்தி அடையாமல் தனது உறவினர்களையோ அல்லது அவரது கிரஹ நிலைகள் ஒட்டியவரையோ பற்றிக் கொள்வது
விளைவு : நல்ல ஆசைகளை கொண்டு பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஆவலில் இருப்பவர்கள் திடீரென்று இறக்க நேரிடும் போது ஆன்மா சாந்தி அடையாமல் அந்த ஆசையை உயிருடன் இருக்கும் ஒருவர் மூலம் நிறைவேற்றி கொள்வார்கள். இதன் விளைவாக சிறிய வயதாக இருப்பவர்கள் பெரிய, பெரிய விசயங்களை சொல்வார்கள், எந்த கேள்வி கேட்டாலும் ஏற்கனவே பார்த்தது போல் சொல்வார்கள், நாம் அவர்களை பார்த்து வியப்பில் இருப்போம். இந்த நிலை அந்த சிறுவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் இருக்கும் பிறகு மறைந்து விடும்.
கெட்ட ஆசைகள் உள்ளவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் மற்றவர்களை பிடித்துக் கொண்டால் பல தொல்லைகளை கொடுத்து விடுவார்கள். இதையே பேய்பிடித்தல் என்று சொல்வார்கள். இந்நிலை உள்ளவர்கள் படும் துன்பம் பெரும் துன்பமாக இருக்கும் தானே சிரித்தல், விழிகளை உருட்டுதல், உயிருடன் விலங்குகளை கடித்து இரத்தத்தை குடித்தல், ஓடுதல், பழையவர்களின் பெயரை சொல்லி கூப்பிட்டு திட்டுதல், அடித்தல் போன்ற வெறியான செயல்களில் ஈடுபடுவார்கள்.

குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும்








mindvoice: konjam over a thaan pooromooo ... parvala... irukkattumm... 

ooppss.,.. no softcopy available... anyhow these above gives the glimpse of the content... courtesy suzhimunai for remembering and notes reference

reading, knowing and to know the purpose of this stage is very much need... 
most of bagavad gita concept but every word is meaningful and deep contented to understand its meaning to understand the life. have to read the lines slowly to get its value to the mind.






April 19, 2015

Anjaneyar, Sudharsana, Varadaraja Vaibhavam Series - by V.S.Karunakarachariar Swami

great upanysams and more rahasya reveleaing upanyasams of srivaishnavism from VSK swamin

completed the first continuation series containing -

PanchamukhaAnjaneyarVaibhavam_VSK
ChakrarajaVaibhavam_VSK
VaradarajaVaibhavam_VSK


still more to go of him. uploading to srivaishnavam folder...

எதை அடைகிறோம் - BG 9.25


கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம்.

1. விஷாத யோகம்.
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்.
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்.
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்.
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்.
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்.
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்.
எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்.
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11.விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம்.
இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம்.
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம்.
தீய குணங்களை ஒழித்து,
நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம்.
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.


April 15, 2015

temp final post

stopping my blog for now.. as it seems my thoughts and this knowledge i have to embed first... to fix/fit myself more is necessary.
when its necessary will learn this continuation for  leading life to live the life, when i had the life for me.

கர்மா

completed கர்மா  karma yoga - consolidated articles of his blog on the topic of karma yoga...

a wonderful, good flow of artciles at this blog @ http://anmikam4dumbme.blogspot.sg/
a logical and practical content delivery author...

appreciate him, and his contents on consolidated articles as PDF... also many other practical contents in the selected label at his blog. 
3 major  yogas (not yogasana) - bhakti, gnana, and karma - as per bagavadgita


கடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக


usually wont do onscreen reading - usually print that and prefer hard copy reading, but this pdf, with some sub-links in it, have to read onscreen... ahh making tired, red eyes.

when we start itself, may be after few pages, we might think its most for brahmans or other following only...
the one what i have in mind is, brahmana status - is not just only birth;
second - one should read completely as the audience level is set as all people, before any conclusion.
so, always skim completely and why not read atleast once in peace, even to know what these brahmana or other followers do... instead tv or other unncesaary time killing activities.


more comments on karma yoga, most of his contents are in short note format only, i think am reading in thrid time... what to do... 
- 'tube light' like me is not a 'eka shanda grahi' (one who can understand when heard just once)... 
- am blessed with memory that, few things i enjoy reading again, like re-watching a movie or watching a recorded old cricket match and ensuring the actions are in sequence only... (hahahahah)

as karma the real necessart part of yoga, as for day today or timetotime activity, reading it and ensuring it fro different places is much necessaity esp for confused person (yah.. me )
- when read first time, might remembered few items and would have practiced
- when read second might followed more

- just reading, something pushed me to make sure of my distrubed mind actions by complete reading again.


took about 6+ hours (as its ekadasi) mutiple breaktime, as tired eyes... is my reading speed good onscreen? if its hardcopy paper reading i would completed very soon....


not to miss this related sub-links to this karma part
விவேகம் -ஆகாரம் >> http://anmikam4dumbme.blogspot.sg/2008/04/blog-post_17.html
விருஷோற்சர்கம் = ?
p26 அஜாமிலன் story  >>  https://www.youtube.com/results?search_query=Ajamila+story



















தெரியலயேப்பா

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.
அதுக்கு அந்த முனிவர்”தெரியலயேப்பா’ன்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.
ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.
சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.
அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.
இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்,” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.
ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

April 14, 2015

http://sadagopan.org - Link

added the new reference link, where i have downloaded lots of pdf from this site, of various srivaishnava related -  technical, practical and logical explanations in tamil and english of many literatures...

http://sadagopan.org/index.php/categories

have read thiruppavai explanation and few other sloka detailed as well. so time to include that forgotten link to my favourites!




நம்பிக்கை


April 13, 2015

New books

new books purchased... different genres...
few have read in pdf, but as am not a big fan of online pdf reading (coz of bad eyes), i usually print or prefer hard copy books.

ahhh.... god to bless to finish of...

a notable book is the  "elamayae inimai" from sehsadri sashtri.. its a 7+ series of books, and am so late that i just started this.



*** my favourite

added new page " *** My Favourite", link in the top menu

http://ishtavidya.blogspot.sg/p/my-favourite.html

Miscelleneous Notes





April 12, 2015

நம்பகத்தன்மையில்லாத ஒரு வழிபாட்டு முறை

(this is a edited article, modified from a specific set to general)

ஒருவர் மத (சிவ) சின்னங்கள் அணிவதற்காக பயப்படுகிறார்
ஒருவர்  அடியாராக ஆக வேண்டுமென்றால் கட்டுப்பாடு சுத்தம் பத்தம் புலால் மது மாது இதையெல்லாம் சமாளிப்பது சாத்தியமா என பயப்படுகிறார்...!
இவர் இப்படித்தானே இருக்க முடியும் ஏன் இப்படியிருக்கிறார் ..?இப்படி இருந்தால் அடியாராக எப்படியிருக்க முடியும் ? கேடு என பயப்படுகிறார்...!
ஒரு சிலர்தான் இதைத் தாண்டி  வணங்க துணிகிறார்கள் ,,,அவர்களில் பலர் மேற்காட்டப்பட்ட கட்டுப்பாடுகளை கடைபிடித்து எங்கு மீறிவிடுவோமோ என பயந்தே வாழ்கின்றனர்...!
பெருங்கொடுமை கடவுள்  சோதனைச் செய்யும் அறிவியல் ஆசிரியராகவே பார்க்கப்படுகிறார்...!
இப்படி நம்பகத்தன்மையில்லாத ஒரு வழிபாட்டு முறை ஏன் வந்தது?


சிவாலயங்களுக்கோ வீட்டிலிருந்த படியோ தென்னாடுடைய சிவனேப் போற்றி எந்நாட்டவருக்கும் இறைவாப் போற்றி என கூட்டத்தோடு கோசம் போட்டுவிட்டு அப்பா இறைவா (பிரதோசமோ சிவராத்திரியோ)இப்படி ஒரு நல்ல நாளில் உன்னை வணங்குகிறேன் என்னை எப்படியாவது காப்பாற்று பெருந்துன்பத்திலிருக்கிறேன் என ஒரு நிபந்தனை...!
மறுநாள் ஆத்தா தாயி என்ன பெத்தவளே உன் பிள்ளைய நீதாமா காப்பாத்தனும் தீரா துன்பத்துல இருக்கிறேன் என ஒரு நிபந்தனை...!
அன்று மாலையே அப்பனே பிள்ளையாரப்பா சங்கட சதூர்த்தி திருநாள்ள உன்னப் பார்க்க வந்துருக்கன் நீதான் பா என் சங்கடத்த தீர்க்கனும் என ஒரு நிபந்தனை..!
மறுநான் முருகா முருகா முருகா அப்பனுக்கு உரைத்த அப்பனே ஆறமுகனே உனக்கு காவடிதூக்குறன் நீதான்பா காப்பாத்தனும்..!♪♪♪♪
கார்திகை மாதம் வந்துவிட்டது சாமியே சரணம் ஐயப்பா ஒரு மண்டலம் நீதான்பா முழுமுதற்கடவுள் ....இந்த வருசம் பூரா நீதான் காப்பாத்தனும் என நிபந்தனை
அப்பா மலைக்குப்போய்வந்து இரண்டுமாதம் ஆயிட்டு திருப்பதிபொய் மொட்டபோட்டு லட்டு திண்டு வந்தா திருப்பம் வரும்னாங்க குடம்பத்தோட போய்டு வருவோம்...திருப்பம் வரும்...
இப்படி அடுக்கிக்கேட்டே போனா எப்ப எந்த சாமி உனக்கு அருள்புரியுது ...அந்த அருளை வைத்து எப்பதான் உன் வாழ்க்கை திருப்தியடைந்தது?இதுல என்னத்தக் கண்டீங்க....?இதுதான் வழிபாட்டு முறையா ..?இதுலவேற எங்க குடும்பமே பயங்கர பக்தியான குடும்பம் ...?எனப் பீற்றல் வேறு...?
இப்படிப்பட்ட வழிபாடுமுறையால நாட்டில் பெருசா என்ன கிழிச்சீங்க..!
மக்கள் மனமெல்லாம் சந்தோசமா அமைதியா இருக்கா?ஏன் உங்க வீட்ல அமைதியிருக்கா ?ஏன் இல்லை என்றால் உங்கள் வழிபாட்டு முறையிலும் அமைதியும் தெளிவும் நம்பத்தன்மையும் இல்லாததே காரணம்...!


தெய்வம் என்று நீங்கள் எந்த ஒன்றை உண்மையாக மெய்யாக நம்புகிறீர்களோ அந்த தெய்வம் எந்தப்பெயரில் எந்த உருவத்தில் இருந்தாலும் அதுதான் சிவம்
இதைத்தான் யாதொரு தெய்வமாகினும் மாதொருபாகத்தனாய் அருள்வதாகப் பொருள்..
தவிர பார்ப்தையெல்லாம் நம்புகிறோம் என்ற மாயையில் எதிலும் நம்பகத்தன்மையில்லாது பக்தியல்ல

அன்பே வடிவானவர் ,,கருணையே உருவானவர் என்பது அவரை முழுமுதற் கடவுளாக உணர்ந்தவரால் மட்டுமே உணர முடியும்..!
அவர் கேட்பதை கொடக்கிற சாமியா என கேட்காதீங்க ...!உனக்கு உகந்தது என்றால் நீ கேட்காவிடுனும் கொடுக்கும் தயாபரன்..!
இது உண்மையா என கேட்க்காதீங்க ஒருமுறை முழுதா நம்பினோர்கு தன்னை முழுசா காண்பிக்கும் ..!
தன் பிரச்சனை தீர்ப்பாரா என கேட்காதீங்க ...பிரச்சனைக்கு பரிகாரம் சொல்லாமல் தீர்வுதரும் நீதிமான் 
இன்பம் தருவாரா என கேட்காகாதிங்க இன்பத்தின் வழியே உள்ளே நுழையும் தென்றல் 
நம்பலாமா என்று கேட்க்காதீங்க உண்மையாக நம்பிக் கெட்டவரில்லா சாதனையாளன் 

கண்ணன் - உத்தவர்

கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை? (கண்ணனின் அற்புத விளக்கம்)
*************************** பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார். ''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர். ''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன். உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?'' ''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன் . ''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர். இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர். பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்: ''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான். 'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. . துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன். ''அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன். ''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?'' புன்னகைத்தான் கண்ணன் . ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான். ''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர். ''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன். உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

April 11, 2015

love...like...

when you like a flower- you just pluck it. but.
when you love a flower, you water it daily..!

one who understand this.. understands life as well

Kurai Ondrum Illai - Series from Mukoor Swami


wonderful, blessed upanyasam similar to the kurai ondrum illai book contents...
its not a complete series.. but couldnot find the continuation till now.. anyhow his mesmerizing voice and in flow of contents , may few drops from heart for sure

a must to hear

i first read the first part, then only had the chance to hear it... wow, its true that, i could recollect most of the pages and notes just passing through in my mind...
its true that hearing is more effective than reading... it goes directly to heart from ears.



@ MyDropbox
/spiritual/PURANAs_ITHIKHASAs/KuraiOndrumIllai_MukoorSwami




Panchamukha Anjaneyar Vaibhavam - VSK


wonderful vaibhavam of anjaneya...

@ dropbox
/LIFEHISTORY_Story_Vaibhavams/PanchamukhaAnjaneyarVaibhavam_VSK



jai sri ram
jai hanuman


Audio CD/DVDs of discourse by Sri U.Ve. V. S. Karunakarachariar Swami


a fluent and down to earth .. easy social slang of upanyasams from VSK swami...
have got all the collection of his and it time for series of VSK now :)

http://nadadoor.org/dvd_cd.htm




April 07, 2015

தாரக மந்திரம்

சிலையும் நீயே .. சிற்பியும் நீயே ...
உன்னை நீ சரி செய்துகொள் ... உலகம் தானாக சரியாகி விடும்

The cockroach theory for self development

The cockroach theory for self development

At a restaurant, a cockroach suddenly flew from somewhere and sat on a lady.

She started screaming out of fear.

With a panic stricken face and trembling voice,she started jumping, with both her hands desperately trying to get rid of the cockroach.

Her reaction was contagious, as everyone in her group also got panicky.

The lady finally managed to push the cockroach away but ...it landed on another lady in the group.

Now, it was the turn of the other lady in the group to continue the drama.

The waiter rushed forward to their rescue.

In the relay of throwing, the cockroach next fell upon the waiter.

The waiter stood firm, composed himself and observed the behavior of the cockroach on his shirt.

When he was confident enough, he grabbed it with his fingers and threw it out of the restaurant.

Sipping my coffee and watching the amusement, the antenna of my mind picked up a few thoughts and started wondering, was the cockroach 
responsible for their histrionic behavior?

If so, then why was the waiter not disturbed?

He handled it near to perfection, without any chaos.

It is not the cockroach, but the inability of the ladies to handle the disturbance caused by the cockroach that disturbed the ladies.

I realized that, it is not the shouting of my father or my boss or my wife that disturbs me, but it's my inability to handle the disturbances caused by their shouting that disturbs me.

It's not the traffic jams on the road that disturbs me, but my inability to handle the disturbance caused by the traffic jam that disturbs me.

More than the problem, it's my reaction to the problem that creates chaos in my life.

Lessons learnt from the story:

I understood, I should not react in life.

I should always respond.

The women reacted, whereas the waiter responded.

Reactions are always instinctive whereas responses are always well thought of.
A beautiful way to understand............LIFE.
Person who is HAPPY is not because Everything is RIGHT in his Life..

He is HAPPY because his Attitude towards Everything in his Life is Right..!!

April 06, 2015

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

நீதிக்கதை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்." அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

April 02, 2015

ஆசை - அன்பு

ராமர் கானகம் போனபோது, மகன் பிரிவை தாளாது மாண்டார், தந்தை தசரதர். ராமரை சுமந்து பெற்ற தாயார் கோசலை, மாளவில்லை. ஏன்? மகன்மேல் ஆசை வைத்தார் தசரதர்; அன்பு வைத்தாள் கோசலை. 
ஆசை, மனிதனை மாள வைக்கும்; அன்பு, வாழ வைக்கும். இது தான், இரண்டிற்கும் வித்தியாசம்.
வாரியார் special

March 31, 2015

பாபங்களுக்கான பிறவிகள் - கருட புராணம்

பாபங்களுக்கான பிறவிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா!!!
தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது.
1 உத்தமனாய் இருப்பவர் தேவனாகிறார்
2 உத்தமனாய் இல்லையெனில் முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார்
3 தருமவான் தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன். மூலிகைச் செடியாவான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான்.
4 வலையில் சிக்கிய மீன் எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ;
5 கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம் பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது
6 மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன் விருச்சிகப் பிறவி அடைகிறான்
7 தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன் நண்டாக பிறக்கிறான்
8 குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர் வெளவாலாக தொங்குகின்றான்
9 தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள் மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர்
10 கூர்மையான நோக்குள்ளவர் வல்லூராக பிறப்பார்
11 பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர் பருந்துப் பிறவி வாய்க்கும்
12 மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர் கொக்காக பிறக்கிறார்
13 குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர் புலியாக பிறக்கிறார்
14 நண்பனுக்கு துரோகம் செய்தவர் நரியாக, கழுதையாக பிறக்கிறார்
15 காது கேளாதவரை இகழ்பவர் அங்கஹீனனாக பிறக்கிறார்
16 தாகத்துக்கு தண்ணீர் தராதவர் காக்கையாக பிறக்கிறார்
17 பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர் புழுவாகப் பிறக்கிறார்
18 விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர் புpசாசாக அலைய நேரிடும்
19 பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர் ஆவியாக அல்லாடுவர்
20 கொலை, கொள்ளை, செய்பவர் 100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார்
21 தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும்
22 மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர் திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார்
23 தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர் மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார்
24 விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர் பன்றியாக, கோழியாக பிறக்கிறார்
25 கோள் சொல்பவர் பல்லியாக, தவளையாக பிறக்கிறார்
26 உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர் அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்
27 மாமிசம் புசிக்கின்றவருக்கு சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன
28 அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர் கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார்
29 தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர் ஊமையாக பிறக்கிறார்
30 தெய்வ நம்பிக்கை இல்லாதவர் பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது

பாபங்களுக்கான வியாதிகள் - கருட புராணம்

பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா
1 ;யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர். மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார்
2 எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார்.
3 வுpஷம் கலந்து யாரையும் கொலை செய்தால் தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார்
4 கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு சுயரோகத்தால் துன்பப்படுவார்
5 விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார்
6 தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர் கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார்
7 பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர் நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்
8 மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர் உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார்
9 பொருள்களில் கலப்படம் செய்தவர்கள் வாய்வு தொல்லையால் அவதிப்படுவார்
10 மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர் சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார்
11 ஆபாச நடனங்களை பார்;க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை
நோய்க்கு ஆட்படுபவர்
12 பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர் பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால்
துன்புறுவர்.
13 வுழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால் நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்
14 இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள் பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்.
15 வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர் பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும்.
16 சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர் மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்
17 சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர் அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண்
உடையவராகவும் பிறப்பார்
18 சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர் வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார்
19 தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர் ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய்
உள்ளவராகிறார்
20 ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர் சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம்
21 புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர் வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார்.
22 உடன் பிறந்த சகோதர – சகோதரிகளை மிரட்டுபவர் மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார்
23 வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடு;ப்பவர் ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம்
24 காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டு;ப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள் பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார்.
25 கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர் உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்
26 பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர் வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர்
27 தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்
28 பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள் தொற்று நோய்க்குள்ளாவார்கள்
29 காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள்
30 ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர் சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவர்

நல்வினைக்கான நன்மைகள் - கருடபுராணம்

நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம் -ஸ்வாமி சிவானந்தா
1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்
3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு
4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்
5 தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்
6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்
7 இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்
8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்
9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்
10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்
12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை
13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்
14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது
15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்
16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்
17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்
18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்
19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்
20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்
21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்
23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்
24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்
25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்
26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்
27 வுpரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்
28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்
29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30 இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.
எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவா